கீழே உள்ளவர்களைப் பாருங்கள்

"உங்களை விட கீழே உள்ளவர்களைப் பாருங்கள்! உங்களைவிட மேலே உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட் கொடைகளை நீங்கள் மறவாமலிருக்க இதுவே ஏற்ற வழியாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

 

யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன்

பிறரிடம் யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன் மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது முகத்தில் சதையற்றவனாக வருவான் என்பது நபிமொழி

இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

 

உன்னுடையது உன்னுடையது எது?

ஆதமுடைய மகன் "என்னுடையது என்னுடையது" என்கிறான் ஆதமுடைய மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் பிறருக்குக் கொடுத்துக் களித்ததையும் தவிர வேறு எது உன்னுடையது? என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னுஷ்ஷிக்கிர்(ரலி) : முஸ்லிம்

 

This page is powered by Blogger. Isn't yours?