ஒன்றுபடுவோம்
நீங்கள் உங்களிடையே உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்! ஒருவரை ஒருவர் புறக்கணிக்காதீர்கள்! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! அல்லாஹவின் அடியார்களாகவும் உடன்பிறந்த சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள்! எந்த முஸ்லீமும் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது.
அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லீம்
ஒரு முஸ்லீம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கலாகாது. இருவரும் சந்திக்கும்போது அவர் இவரைப் புறக்கணிக்க வேண்டாம். அவ்விருவரில் யார் ஸலாமைக் கொண்டு முந்துகிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர்
அபூஅய்யூப் (ரலி) : புகாரி, முஸ்லீம்
ஒவ்வொரு வியாழன், திங்களில் மக்களின் நல்லறங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொருவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஒரு மனிதருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே பகை இருந்தால் அவனை மன்னிக்காமல் ''இவ்விருவரும் சமாதானமாகும் வரை இவ்விருவரையும் விட்டு விடுங்கள்"" என்று கூறிவிடுவான்.
அபூஹ-ரைரா(ரலி) : முஸ்லீம்
தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத்தைக் கொடுத்து வருதல், அத்தனை முஸ்லீம்களின் நலனிலும் அக்கறை செலுத்துதல் ஆகியவற்றின் மீது நபி(ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.
ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) : புகாரி, முஸ்லீம், திர்மிதீ.
அரபு தீபகற்பத்தில் தன்ளை மக்கள் வணங்குவதில் ஷைத்தான் நம்பிக்கையிழந்து விட்டான். எனினும் அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி விடுவான்.
ஜாபிர்(ரலி) : முஸ்லீம்
உங்களில் ஒருவர் தனது சகோதரனுக்கு முகம் காட்டும் கண்ணாடி போன்றவர். (அபூஹ-ரைரா(ரலி) : தப்ரானி)
ஒரு முஸ்லிமுக்கு ஏற்பட்ட இவ்வுலக துன்பம் ஒன்றை இன்னொரு முஸ்லிம் நீக்கினால் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அவரை விட்டும் நீக்குகிறான்.
இவ்வுலகில் சிரமப்படுபவருக்கு உதவினால் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருக்கு ஏற்படும் சிரமத்தின் போது அல்லாஹ் உதவுவான். இவ்வுலகில் ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அவரது குறையை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் மறைப்பான். ஒருவர் அடியான் ஒருவனுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான். (அபூஹ-ரைரா(ரலி) : திர்மிதி, முஸ்லிம்)
அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லீம்
ஒரு முஸ்லீம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கலாகாது. இருவரும் சந்திக்கும்போது அவர் இவரைப் புறக்கணிக்க வேண்டாம். அவ்விருவரில் யார் ஸலாமைக் கொண்டு முந்துகிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர்
அபூஅய்யூப் (ரலி) : புகாரி, முஸ்லீம்
ஒவ்வொரு வியாழன், திங்களில் மக்களின் நல்லறங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொருவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஒரு மனிதருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே பகை இருந்தால் அவனை மன்னிக்காமல் ''இவ்விருவரும் சமாதானமாகும் வரை இவ்விருவரையும் விட்டு விடுங்கள்"" என்று கூறிவிடுவான்.
அபூஹ-ரைரா(ரலி) : முஸ்லீம்
தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத்தைக் கொடுத்து வருதல், அத்தனை முஸ்லீம்களின் நலனிலும் அக்கறை செலுத்துதல் ஆகியவற்றின் மீது நபி(ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.
ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) : புகாரி, முஸ்லீம், திர்மிதீ.
அரபு தீபகற்பத்தில் தன்ளை மக்கள் வணங்குவதில் ஷைத்தான் நம்பிக்கையிழந்து விட்டான். எனினும் அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி விடுவான்.
ஜாபிர்(ரலி) : முஸ்லீம்
உங்களில் ஒருவர் தனது சகோதரனுக்கு முகம் காட்டும் கண்ணாடி போன்றவர். (அபூஹ-ரைரா(ரலி) : தப்ரானி)
ஒரு முஸ்லிமுக்கு ஏற்பட்ட இவ்வுலக துன்பம் ஒன்றை இன்னொரு முஸ்லிம் நீக்கினால் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அவரை விட்டும் நீக்குகிறான்.
இவ்வுலகில் சிரமப்படுபவருக்கு உதவினால் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருக்கு ஏற்படும் சிரமத்தின் போது அல்லாஹ் உதவுவான். இவ்வுலகில் ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அவரது குறையை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் மறைப்பான். ஒருவர் அடியான் ஒருவனுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான். (அபூஹ-ரைரா(ரலி) : திர்மிதி, முஸ்லிம்)