சிறந்த முஸ்லீம்
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே. ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (49:10)
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்டார். அவர் மிகவும் கெட்டவர் எனக் கூறிய நபி(ஸல்) அவருக்கு அனுமதியளியுங்கள் என்றனர். அவர் வந்ததும் அவரிடம் மென்மையாகப் பேசினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவரைப் பற்றி ஒரு விதமாகக் கூறிவிட்டு, அவரிடம் மென்மையாகவும் பேசினீர்களே"" என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆயிஷாவே! ஒருவனது (கை மற்றும் வாயால் எற்படும்) தீங்குக்கு அஞ்சி மக்கள் எவனை (விமர்சிக்காது) விட்டு விடுகிறார்களோ அவன்தான் மறுமை நாளில் மனிதர்களில் மிகவும் கெட்டவன்" என விடையளித்தார்கள்.
ஆயிஷா(ரலி) : முஸ்லீம்
எவரது நாவால், கரத்தால் ஏனைய முஸ்லீம்களுக்குத் தீங்கு ஏற்படவில்லையோ அவர்தான் முஸ்லீம் என் நபி(ஸல்) கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லீம்
மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இப்னு மஸ்வூத்(ரலி) : அஹ்மத்
நல்லவற்றில் எதையும் அற்பமாக நினைத்து விடாதே! உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே என்பதும் நபிமொழி.
அபூதர்(ரலி) : முஸ்லீம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்டார். அவர் மிகவும் கெட்டவர் எனக் கூறிய நபி(ஸல்) அவருக்கு அனுமதியளியுங்கள் என்றனர். அவர் வந்ததும் அவரிடம் மென்மையாகப் பேசினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவரைப் பற்றி ஒரு விதமாகக் கூறிவிட்டு, அவரிடம் மென்மையாகவும் பேசினீர்களே"" என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆயிஷாவே! ஒருவனது (கை மற்றும் வாயால் எற்படும்) தீங்குக்கு அஞ்சி மக்கள் எவனை (விமர்சிக்காது) விட்டு விடுகிறார்களோ அவன்தான் மறுமை நாளில் மனிதர்களில் மிகவும் கெட்டவன்" என விடையளித்தார்கள்.
ஆயிஷா(ரலி) : முஸ்லீம்
எவரது நாவால், கரத்தால் ஏனைய முஸ்லீம்களுக்குத் தீங்கு ஏற்படவில்லையோ அவர்தான் முஸ்லீம் என் நபி(ஸல்) கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லீம்
மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இப்னு மஸ்வூத்(ரலி) : அஹ்மத்
நல்லவற்றில் எதையும் அற்பமாக நினைத்து விடாதே! உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே என்பதும் நபிமொழி.
அபூதர்(ரலி) : முஸ்லீம்