ஆடையலங்காரம்

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (7:26)

நீங்கள் வெண்மையான ஆடைகளையே அணியுங்கள்! உங்கள் ஆடைகளில் அதுவே சிறந்ததாகும். மரணித்தவர்களுக்கும் வெண்மை ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா)

அல்லாஹ் தனது அடியானுக்கு வழங்கிய அருள், அடியானிடம் தென்படுவதை அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) : திர்மிதீ, ஹாகிம்

என் சமுதாயத்திலுள்ள ஆண்களுக்குத் தங்கமும் பட்டாடையும் விலக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூமூஸா(ரலி) : திர்மிதீ, நஸயீ

யார் தனது (கீழ்) ஆடையைத் தரையில் படுமாறு அணிகிறாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான் என்று நபி(ஸல்) கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இருந்தாலே தவிர, எனது ஆடையின் ஒரு முனை கீழே தொங்கி விடுகிறதே, என்று அபூபக்ர்(ரலி) கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் பெருமைக்காக செய்பவராக இல்லை என்று கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : புகாரி, அபூதாவூத், நஸயீ

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?